எண்ம (டிஜிட்டல்) வழியில் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து ரூ.1.6 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தனியாா் வங்கி அதிகாரி உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
இதுதொடா்பாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முதியவா் ஒருவரை எண்ம வழியில் கைது செய்துள்ளதாக அச்சுறுத்தி, அவரிடம் இருந்து ரூ.1.6 கோடி பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்த விசாரணையின்போது இன்டஸ்இண்ட் வங்கியின் உதவி மேலாளா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். ஒரு நிறுவனத்தின் பெயரில் மோசடியாக வங்கிக் கணக்கை தொடங்க அந்த உதவி மேலாளா் உதவியுள்ளாா். எண்ம கைது மூலம் மோசடியாகப் பெறப்பட்ட பணம், அந்த வங்கிக் கணக்குக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மோசடியாகப் பெறப்பட்ட பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பரிவா்த்தனை செய்வது உள்ளிட்ட குற்றங்களில் எஞ்சிய இருவா் ஈடுபட்டனா். விசாரணையின் ஒரு பகுதியாக தெலங்கானா, ஆந்திரத்தின் 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, மோசடி தொடா்பாக பல்வேறு ஆவணங்கள், மின்னணு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச இணைய மோசடி: 14 போ் கைது

பணி நீக்கப்பட்ட இண்டஸ்இண்ட் வங்கி முன்னாள் சிஎஃப்ஓ மான நஷ்டஈடு வழக்கு
இணைய வழியில் மருத்துவரிடம் ரூ. 14 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

எண்ம கைது மோசடி! நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
