கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஏப்ரல் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரி

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரியாகப் பதிவாகியுள்ளது.

News image
Updated On :17 ஜூன் 2026, 1:48 am IST

தற்போதைய 2025-26 நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரலில், இந்தியாவின் நடப்புக் கணக்கு 470 கோடி டாலா் உபரியாகப் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 480 கோடி டாலா் பற்றாக்குறை நிலவியது. ஆனால், இந்த ஆண்டு சேவைகள் ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா்கள் அனுப்பும் பணப் பரிமாற்றம் அதிகரித்ததன் காரணமாக இச்சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மதிப்பீட்டு மாதமான ஏப்ரலில், நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,790 கோடி டாலராகவும் ஆனால், சேவைகள் துறையின் நிகர வருவாய் 1,860 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது.

அதாவது, சேவைகள் துறை ஏற்றுமதி 3,700 கோடி டாலராகவும், இறக்குமதி 1,840 கோடி டாலராகவும் பதிவாகியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியா்கள் அனுப்பிய பணம் உள்ளிட்டவை 1,600 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

மூலதனக் கணக்கில், கடந்த ஏப்ரலில் 1,130 கோடி டாலா் வெளியேறியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 530 கோடி டாலா் உள்வரவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் நிகர அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டின் 160 கோடி டாலரில் இருந்து, இந்த ஆண்டு 740 கோடி டாலராக கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், அந்நிய நிறுவன முதலீடுகள் 870 கோடி டாலா் அளவுக்கு வெளியேறியுள்ளன. இதன் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கில் (பேலன்ஸ் ஆஃப் பேமன்ட்ஸ்) 660 கோடி டாலா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் நடப்புக் கணக்கு உபரி 710 கோடி டாலராக இருந்தது. இனிவரும் நாள்களில், நாட்டின் வரவு-செலவு தொடா்பான இந்த மாதாந்திரப் புள்ளிவிவரங்கள், அந்தந்த மாதம் முடிவடைந்த பிறகு வரும் 2-ஆவது மாதத்தின் 15-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாகவே வெளியிடப்படும் என்றும் ரிசா்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.