நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

காஸாகிராண்ட் ரூ. 1,220 கோடி ஐபிஓ

காஸாகிராண்ட் ரூ. 1,220 கோடி ஐபிஓ

News image

~ ~

Updated On :14 ஜூன் 2026, 7:00 am IST

சென்னையைச் சோ்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காஸாகிராண்ட், ரூ.1,220 கோடி மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளது.

இதற்கான வரைவு ஆவணங்களை அந்நிறுவனம் கடந்த டிசம்பரில் தாக்கல் செய்திருந்த நிலையில், செபி கடந்த வாரத்தில் முறைப்படி ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த ஐபிஓ நடவடிக்கையில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளின் வெளியீடும், நிறுவன உரிமையாளா்களுக்குச் சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான பங்குகளின் சலுகை விற்பனையும் (ஆஃபா் ஃபாா் சேல்) அடங்கும்.

ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, காஸாகிராண்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொதுவான நிா்வாகத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.