மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

டெஸ்லா - ஒய் எல்: புதிய வேரியண்ட் அறிமுகம்!

டெஸ்லா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி வேரியண்ட் ஒய் எல்-ஐ இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

News image

Tesla Model Y L

Updated On :22 ஏப்ரல் 2026, 7:09 pm IST

டெஸ்லா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி வேரியண்ட் ஒய் எல் (YL) ஆடம்பர அம்சங்களுடன் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

6 இருக்கைகள் கொண்ட அமைப்பில் வரும் இந்த காரின் விலை ரூ. 61.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது டெஸ்லா.

வெறும் 5 வினாடிகளில் மணிக்கு பூஜ்ஜியத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை எட்டும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 201 கி.மீ ஆகும். நீண்ட வீல்பேஸ் கொண்ட வேரியண்ட் என்பதால், அதிக இடவசதியை வழங்கும்.

இன்று முதல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதே வேளையில், வாடிக்கையாளர்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் பி.கே.சி - மும்பை, ஏரோசிட்டி - புதுதில்லி மற்றும் ஆர்க்கிட் வணிகப் பூங்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ள டெஸ்லா மையங்களில் எங்களின் புதிய வாகனத்தை நேரில் சென்று பார்வையிடலாம் என்றது நிறுவனம்.

Summary

Tesla on Wednesday unveiled its Model Y L in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.