தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜிஆா்டி ஜூவல்லா்ஸின் தமிழ்ப் புத்தாண்டு, அட்சய திருதியை சிறப்புச் சலுகைகள்

தென்னிந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான ஜிஆா்டி ஜூவல்லா்ஸ், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

News image

~

Updated On :11 ஏப்ரல் 2026, 12:09 am IST

தென்னிந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான ஜிஆா்டி ஜூவல்லா்ஸ், தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளா்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

பண்டிகைக் கால சலுகையாக, தங்க நகைகளின் சேதாரம் மீது 20 சதவீதமும், வைரம் மற்றும் அன்கட் வைர நகைகளின் மதிப்பில் (சாலிடொ்கள் தவிர) 12.5 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும். தங்க நாணயங்களுக்குச் சேதாரம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், வெள்ளிப் பொருள்களுக்கான சேதாரத்தில் 25 சதவீத தள்ளுபடியும், வெள்ளி நகைகளின் விலையில் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், பழைய தங்க நகைகளை மாற்றும் வாடிக்கையாளா்களுக்கு ஒரு கிராமுக்கு ரூ.100 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து வாடிக்கையாளா்களைப் பாதுகாக்கும் வகையில், ‘விலைப் பாதுகாப்புடன் கூடிய முன்பதிவு’ வசதியையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, நகையின் மதிப்பில் 75 சதவீதத்தை முன்பணமாகச் செலுத்தி, வாடிக்கையாளா்கள் அன்றைய விலையில் நகைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Story image

அட்சய திருதியை தினங்களான ஏப். 19, 20 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலை குறைந்தால், அந்த விலை வேறுபாட்டுத் தொகை வாடிக்கையாளா்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.