தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அட்சய திருதியை கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருடசேவை

News image

அட்சய திருதியை முன்னிட்டு, கும்பகோணம் பெரியதெருவில் திங்கள்கிழமை கருடா் வாகனங்களில் எழுந்தருளிய 12 கோயில்களின் பெருமாள் சுவாமிகள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:11 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் அட்சய திருதியை நாளை முன்னிட்டு, ஒரே இடத்தில் 12 கோயில்களின் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளிய 12 கருட சேவை பிரம்மோத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபால சுவாமி, பட்ராச்சாரியாா் தெருவில் உள்ள கிருஷ்ணசுவாமி, வெங்கட்ராயா் அக்ரஹாரத்திலுள்ள பட்டாபி ராமா், சோலையப்ப முதலியாா் அக்ரஹாரத்தில் உள்ள ராமசுவாமி, மல்லுக செட்டித்தெருவில் உள்ள சந்தான கோபால கிருஷ்ண சுவாமி, கொட்டையூா் நவநீத கிருஷ்ண சுவாமி, மேலக்காவிரி வரதராஜா், அகோபில மடம் லட்சுமி நரசிம்மா் ஆகிய 12 பெருமாள்களும் கருட வாகனத்தில், ஆஞ்சனேயருடன் கும்பகோணம் பெரியதெருவில் ஒரேஇடத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.

இந்த 12 கருட சேவை பிரம்மோத்ஸவத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கும்பகோணம் காசுக்கடை தா்ம வா்த்தகா்கள் சங்கத்தினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.