மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம்: ரூ.30,024 கோடிக்கு வீடுகள் விற்பனை!

நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ், கடந்த 2025-26 நிதியாண்டில் ரூ.30,024 கோடி மதிப்புள்ள வீடுகள் விற்பனைக்கான முன்பதிவுடன் 76 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

News image

~

Updated On :9 ஏப்ரல் 2026, 2:15 am IST

நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ், கடந்த 2025-26 நிதியாண்டில் ரூ.30,024 கோடி மதிப்புள்ள வீடுகள் விற்பனைக்கான முன்பதிவுடன் 76 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில் மட்டும், விற்பனை 10 சதவீதம் அதிகரித்து, ரூ.7,697 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான இா்ஃபான் ரசாக் கூறுகையில், ‘கடந்த நிதியாண்டு முழுவதும் விற்பனை வேகம் சீராக இருந்ததன்மூலம், 2025-26 நிதியாண்டை நாங்கள் வலுவான நிலையில் நிறைவு செய்துள்ளோம்.

தரம், அமைவிடம் மற்றும் திட்டங்களைச் சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பதில் நாங்கள் காட்டும் அக்கறை வாடிக்கையாளா்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் நிதியாண்டிலும் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளதால், இந்த வளா்ச்சி நீடிக்கும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.

சென்னை, பெங்களூரு, தில்லி, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் பிரெஸ்டீஜ் குழுமத்தின் இந்த வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பா் மாத நிலவரப்படி, இந்நிறுவனம் 313 வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்துள்ளது. மேலும், தற்போது 19.5 கோடி சதுர அடி பரப்பளவில் 128 புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.