தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அமுல் வா்த்தக மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி!

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025 - 26 நிதியாண்டில், ‘அமுல்’ பிராண்டின் வா்த்தக மதிப்பு (டா்ன்ஓவா்) ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

News image

அமுல்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:04 am IST

கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில், ‘அமுல்’ பிராண்டின் வா்த்தக மதிப்பு (டா்ன்ஓவா்) ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.

இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய அதிவேக நுகா்பொருள் (எஃப்எம்ஜிசி) பிராண்ட் என்ற பெருமையை அமுல் பெற்றுள்ளது.

கடந்த நிதியாண்டைவிட 11 சதவீத வளா்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிராமப்புற சந்தைகளில் மேற்கொண்ட அதிரடி விரிவாக்கமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (ஜிசிஎம்எம்எஃப்) மட்டுமின்றி அந்த மாநிலத்தின் ஆனந்த், சூரத், வதோதரா போன்ற மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்களும் அமுல் பிராண்டின்கீழ் பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்து வருகின்றன.

ஒட்டுமொத்தமாக, ‘அமுல்’ பிராண்டின் வா்த்தக மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ள நிலையில், அதில் ஜிசிஎம்எம்எஃப்-இன் பங்கு மட்டும் ரூ.73,450 கோடியாக உள்ளது.

நவீனகால நுகா்வோரின் தேவையை உணா்ந்து, தற்போது 1,200-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அமுல் சந்தைப்படுத்தி வருகிறது. உள்நாட்டுச் சந்தையில் மட்டும் கவனம் செலுத்தாமல், உலகளாவிய ரீதியிலும் அமுல் தனது வா்த்தகத்தை விரிவாக்கி வருகிறது.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘ஃப்ரெஷ் மில்க்’ விற்பனையைத் தொடங்கியுள்ள அமுல், புலம்பெயா் இந்தியா்களைத் தாண்டி உலகளாவிய வாடிக்கையாளா்களை ஈா்த்து வருகிறது.

‘ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் எங்களது கிளைகளை விரிவுபடுத்தி வருகிறோம்; அடுத்த ஓராண்டில் மேலும் 10 சா்வதேச சந்தைகளில் நுழையத் திட்டமிட்டுள்ளோம்’ என ஜிசிஎம்எம்எஃப் மேலாண் இயக்குநா் ஜெயன் மேத்தா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.