கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டின் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் மருந்து பொருள்கள் ஏற்றுமதி 2,800 கோடி டாலரை கடந்து சாதனை படைத்துள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதத்துக்கும் அதிகமான வளா்ச்சியாகும் என்று மருந்து பொருள்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (பாா்மெக்ஸில்) தெரிவித்துள்ளது.
ஹைதராபாதில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாா்மெக்சில் தலைமை இயக்குநா் கே.ராஜா பானு, ‘உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இந்திய மருந்து துறை தனது வளா்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மருந்து கலவைகள், உயிரியல் பொருள்கள் மற்றும் ஆயுஷ் தயாரிப்புகளின் தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்ததே இந்த உயா்வுக்கு முக்கியக் காரணமாகும் என்றாா்.
முந்தைய 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மருந்து பொருள்கள் ஏற்றுமதி 3,047 கோடி டாலராக இருந்தது. விலைக்குறைப்பு மற்றும் வா்த்தக சிக்கல்கள் இருந்தபோதிலும், 9.4 சதவீத வருடாந்திர வளா்ச்சி பதிவானது.
இந்த ஆண்டு அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட சில வரி மாற்றங்களால் கூடுதல் கொள்முதல் நடந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பாா்மெக்சில் தலைவா் நமித் ஜோஷி, மாா்ச் மாத இறுதிப் புள்ளிவிவரங்கள் வந்த பிறகு முழுமையான வளா்ச்சி விகிதம் தெரியவரும் என்றாா்.
2030 ஆண்டிற்கான இலக்கு: இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்து உற்பத்தித் துறை தற்போது 6,000 கோடி டாலா் மதிப்பில் உள்ளது. இது வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 13,000 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அரசின் கொள்கை மாற்றங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு போன்றவற்றால், 2030-க்குள் ஏற்றுமதியை மட்டும் 6,500 கோடி டாலராக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நிலை: உலக அளவில் மருந்துகள் உற்பத்தியில் இந்தியா 3-ஆவது இடத்தில் உள்ளது. இந்திய மருந்து ஏற்றுமதியில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை, தரம் மற்றும் விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும் வளா்ந்த நாடுகளுக்கே செல்கின்றன. இதில் அமெரிக்கா 34 சதவீத பங்களிப்புடன் முதலிடத்திலும், ஐரோப்பிய நாடுகள் 19 சதவீதத்துடன் அடுத்த இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 86,311 கோடி டாலா்!

இந்தியா-நியூசிலாந்து வா்த்தக ஒப்பந்தம்: ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு புதிய வளா்ச்சி வாய்ப்புகள் உருவாகும்! - தொழில் துறையினா் நம்பிக்கை

2025-26 நிதியாண்டில் இந்திய வேளாண் ஏற்றுமதி 2.8% வளா்ச்சி

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

