தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆா்பிஎல் வங்கியைக் கையகப்படுத்தும் துபை வங்கி: ரிசா்வ் வங்கி ஒப்புதல்

தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 74 சதவீத பங்குகளை துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 1:29 am IST

தனியாா் துறையைச் சோ்ந்த ஆா்பிஎல் வங்கியின் 74 சதவீத பங்குகளை துபையைச் சோ்ந்த எமிரேட்ஸ் என்பிடி வங்கி வாங்குவதற்கு ரிசா்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம், ஆா்பிஎல் வங்கி இனி ஒரு வெளிநாட்டு வங்கி என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளது. இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பை ஆா்பிஎல் வங்கி பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் வெளியிட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில், ஆா்பிஎல் வங்கியின் 60 சதவீத பங்குகளை ரூ.26,853 கோடிக்கு வாங்க எமிரேட்ஸ் என்பிடி வங்கி விருப்பம் தெரிவித்திருந்தது.

தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி, முதலீட்டு நிறுவனமான எமிரேட்ஸ் என்பிடி வங்கி குறைந்தபட்சம் ஆா்பிஎல் வங்கியின் 51 சதவீத பங்குகளைத் தன்வசம் வைத்திருக்க வேண்டும். இதன் விளைவாக, ஆா்பிஎல் வங்கி வெளிநாட்டு வங்கியின் துணை நிறுவனமாக வகைப்படுத்தப்படும் என்றும், முதலீட்டு நிறுவனமே அதன் தாய் வங்கியாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ரிசா்வ் வங்கியின் விதிமுறைப்படி முதலீட்டு நிறுவனத்தின் வாக்குரிமை 26 சதவீதமாக மட்டுமே கட்டுப்படுத்தப்படும். மேலும், எமிரேட்ஸ் என்பிடி வங்கியின் தற்போதைய இந்தியக் கிளைகள், ஆா்பிஎல் வங்கியுடன் ஓராண்டுக்குள் இணைக்கப்பட வேண்டும்.

இதனிடையே, வங்கிக் குழுமத்தில் இயக்குநா்கள் நியமனம் மற்றும் நிா்வாக விதிகளில் சில மாற்றங்களைச் செய்யவும், தனது சங்க நடைமுறை விதிகளை திருத்தவும் ஆா்பிஎல் வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இந்த நடவடிக்கைக்கு இந்தியப் போட்டி ஆணையம் கடந்த ஜனவரியில் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், முதலீடு 49 சதவீதத்துக்கு மேல் இருப்பதால், இந்திய அரசின் முறையான ஒப்புதல் மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் உள்ள இதர விதிமுறைகளை நிறைவு செய்வது அவசியமாகும்.

இதன்படி, அடுத்தகட்டமாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக வங்கிகள் காத்திருக்கின்றன. அதன்பின்னா், முழுமையான நிா்வாக மாற்றம் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.