அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், பங்குச்சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வந்தது.
இந்நிலையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தியதைத் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
அதன்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 188பைசா(2%) உயர்ந்து 92.81 ஆக உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் 156 பைசா உயர்ந்து 93.14 ஆக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி அடையும்பட்சத்தில் அதனை சரிசெய்ய ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும். கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது சுமார் 12.5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிசர்வ் வங்கி ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வங்கிகளின் அந்நியச் செலாவணி இருப்பை 100 மில்லியன் டாலராகக் கட்டுப்படுத்தியுள்ளது. இதனால் ஊகத்தின் அடிப்படையில் நடக்கும் வணிகம் குறையும்.
அதேபோல ஊக வணிகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரூபாயின் மீதான என்டிஎஃப் ஒப்பந்தங்கள் வழங்குவது, அவற்றை புதுப்பிப்பது நிறுத்திவைக்கப்படுகிறது. அது தொடர்புடைய அந்நியச் செலவாணி ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்படுவதுடன் வணிகத்தில் நம்பகமான முதலீடு / காப்பீடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முன்னதாக அதிகபட்சமாக இந்திய ரூபாயின் மதிப்பு 95.21 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியிருந்த நிலையில் 100-யை எட்டும் என்று பல்வேறு கணிப்புகள் வந்த நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
Summary
Biggest Surge In 12.5 Years; Indian Rupee Jumps to 92.81 vs US dollar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.23 ஆக உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொடர் வீழ்ச்சி!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


