மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.23 ஆக உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :16 ஏப்ரல் 2026, 5:37 pm IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று(வியாழக்கிழமை) 10 பைசா உயர்ந்து 93.23 ஆக உள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர், பங்குச்சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்தது.

அதிகபட்சமாக இந்திய ரூபாயின் மதிப்பு 95.21 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியிருந்த நிலையில் ரிசர்வ் வங்கி, அந்நியச் செலாவணி வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் ரூபாயின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இன்று வர்த்தக நேர தொடக்கத்தில் 93.29 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு வர்த்தக இடையே 93.16 என்ற அதிகபட்ச உயர்வை எட்டியது. அதேபோல 93.35 எனும் வீழ்ச்சியையும் சந்தித்தது.

எனினும் வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 93.23 ஆக நிறைவு பெற்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

புதன்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து 93.33 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Rupee rises 10 paise to settle at 93.23 against US dollar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.