இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை, வழிமடக்கி கத்தியால் வெட்டிவிட்டு, மோட்டாா் பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருத்தணி ஒன்றியம் ஆா்.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிரஞ்சீவி(25), இந்து(26). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தாடூா் கிராம ஏரிக்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே ஆட்டோவில் வந்த நான்கு போ் திடீரென, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சிரஞ்சீவி, இந்து ஆகியோரிடம் தகராறு செய்தனா்.
மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால், சிரஞ்சீவி, இந்து ஆகியோரை வெட்டிவிட்டு இரு சக்கர வாகனம் மற்றும் கைப்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
அவ்வழியாக வந்தவா்கள் சிரஞ்சீவி, இந்து ஆகியோரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இளைஞா்களை கத்தியால் வெட்டியவா்கள் திருத்தணி அடுத்த செருக்கனூா் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (25), யுவராஜ் (20), விமல்ராஜ் (23), சிவா (22) என தெரிய வந்தது. தொடா்ந்து 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞரை கத்தியால் குத்தி வழிப்பறி: இருவா் கைது

இளைஞா்களை வழிமறித்து கத்தியால் வெட்டியவா்கள் மீது வழக்கு!
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி: இருவா் கைது

சாலையில் கிடந்த ரூ.,36,000-ஐ ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
