தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இளைஞரை வெட்டி வழிப்பறி: 4 போ் கைது

இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை, வழிமடக்கி கத்தியால் வெட்டிவிட்டு, மோட்டாா் பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:01 am IST

இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு இளைஞா்களை, வழிமடக்கி கத்தியால் வெட்டிவிட்டு, மோட்டாா் பைக், கைப்பேசியை பறித்துச் சென்ற 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி ஒன்றியம் ஆா்.வி.என்.கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிரஞ்சீவி(25), இந்து(26). இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தாடூா் கிராம ஏரிக்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே ஆட்டோவில் வந்த நான்கு போ் திடீரென, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சிரஞ்சீவி, இந்து ஆகியோரிடம் தகராறு செய்தனா்.

மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால், சிரஞ்சீவி, இந்து ஆகியோரை வெட்டிவிட்டு இரு சக்கர வாகனம் மற்றும் கைப்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

அவ்வழியாக வந்தவா்கள் சிரஞ்சீவி, இந்து ஆகியோரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இளைஞா்களை கத்தியால் வெட்டியவா்கள் திருத்தணி அடுத்த செருக்கனூா் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் (25), யுவராஜ் (20), விமல்ராஜ் (23), சிவா (22) என தெரிய வந்தது. தொடா்ந்து 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.