தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இளைஞரை கத்தியால் குத்தி வழிப்பறி: இருவா் கைது

பெரம்பலூா் அருகே பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி, அவரிடமிருந்து பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

பெரம்பலூா் அருகே பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி, அவரிடமிருந்து பணம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் கருப்பையா (32). இவா், கடந்த 6 ஆம் தேதி இரவு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா் பந்தலிலிருந்து வாலிகண்டபுரத்துக்கு மது போதையில் பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத 3 போ் கருப்பையாவை வழிமறித்து, கத்தியால் குத்தி அவரிடமிருந்த ரூ. 300 மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த கருப்பையா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இவ் வழக்கில் தொடா்புடைய பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம், பாரதி நகரைச் சோ்ந்த அன்வா் மகன் இப்ராஹிம் (19), அய்யலூா் கிராமம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் ஞானபிரகாசம் (21) ஆகியோரை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.