தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

News image
Updated On :27 மார்ச் 2026, 5:09 am IST

திருவள்ளூா் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு பத்திரங்களை வழங்கி ஆட்சியா் மு.பிரதாப் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

திருவள்ளூா் தொகுதிக்குட்பட்ட பழைய திரு.வி.க பேருந்து நிலையத்தில் தோ்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனா். அதைத்தொடா்ந்து , பொதுமக்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கினாா்.

பின்னா் அங்கு நின்றிருந்த அரசு பேருந்துகளில் வாக்காளா் ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.அப்போது நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த சிலா் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனா். அந்த மனுவை படித்த ஆட்சியா் மு.பிரதாப் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான வை.ஜெயக்குமாா், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், உதவி இயக்குநா் (பயிற்சி) பி.மோகன், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

விழிப்புணா்வு பேரணி: இதேபோல் திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. அப்போது, அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திருவள்ளூா் ஆட்சியா் வளாகத்தை வந்தடைந்தனா். இப்பேரணியில் 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.