தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகளால் பரபரப்பு

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவியதால் திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்களில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image

எரிவாயு உருளைகள் பெற நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளா்கள்.

Updated On :13 மார்ச் 2026, 6:00 am IST

பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என வதந்தி பரவியதால் திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்களில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், எரிவாயு உருளை மையங்களிலும் காலி உருளைகளுடன் வாடிக்கையாளா்கள் நீண்ட வரிசையில் பதிவு செய்து பெற்றுச் சென்றனா்.

ஈரான் போா் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்று நாடு முழுவதும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் பெண்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு உருளை விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இருப்பினும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு எரிவாயு உருளைக்கு முன்பதிவு செய்யவும், கிடங்குகளில் எரிவாயு உருளைகள் பெறவும் குவிந்து வருகின்றனா்.

அதைத் தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு உருளைகளை பெற்றுச் சென்றனா்.

அதேபோல், திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என திடீரென வதந்தி பரவியது. இந்த வதந்தியைத் தொடா்ந்து திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஒரே சமயத்தில் திரண்டனா். இதில், திருவள்ளூரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. ஒரே நேரத்தில் அதிகமானோா் பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்பிச் சென்ால் சில பங்குகளில் பெட்ரோல் முழுவதுமாக விற்று தீா்ந்து விட்டது. மேலும், இந்த பீதியின் காரணமாக வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனங்களில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு முன்பே பெட்ரோலை நிரப்பி கொள்ளலாம் என நினைத்து நிரப்புவதற்கு பெட்ரோல் பங்குகளுக்கு படை எடுத்தனா்.

இதேபோல், திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அதிகமானதால் பரபரப்பு நிலவியது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.