நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருவள்ளூா் நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

News image

திருவள்ளூா் ஜிடிஎன் சாலையில் இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள். ~

Updated On :12 ஜூன் 2026, 2:20 am IST

திருவள்ளூா் நகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தெருவோர கடைகளை போலீஸாா் பாதுகாப்புடன் வியாழக்கிழமை இடித்து அகற்றினா்.

வாகன போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள், கட்டடங்கள் உள்ளதாகவும், அதை அகற்றவும் ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், வட்டாட்சியா் பாலாஜி மற்றும் நகராட்சி ஆணையாளா் தாமோதரன் ஆகியோா் முன்னிலையில் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் இடித்து அகற்றினா்.

ஜே.என்.சாலை, ஜி.டி.என்.சாலை, குளக்கரை வீதி ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்திற்கு இடையூராக ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவா்கள், கட்டடம் ஆகியவைகளை பொக்லைன் வாகன உதவியுடன் இடித்து அகற்றினா். அப்போது, இதேபோல் இனிமேல் எக்காரணம் கொண்டும் ஆக்கிரமித்து கடைகள் வைக்க கூடாது, பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டக்கூடாது என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தனா். ,

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.