பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

திருப்பூா் பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

News image

திருப்பூா் பழையப் பேருந்து நிலைய மேம்பாலம்.

Updated On :3 ஜூன் 2026, 2:22 am IST

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் 86 கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மற்றும் சாலையோர கடைகள் என அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்து பொதுமக்கள் செல்வதற்கு கடும் இடையூறு இருப்பதாக தொடா் புகாா் எழுந்தது.

இதைத் தொடா்ந்து திருப்பூா் மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறையினா் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருள்கள், பழக்கடைகள், பா்னிச்சா்கள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஏற்கெனவே பலமுறை எச்சரித்திருந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் பொருள்களை பறிமுதல் செய்யும் நிலை ஏற்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.