பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தூத்துக்குடி மாநகராட்சி வணிக வளாகங்களில் எம்.பி. ஆய்வு

News image

வணிக வளாக பகுதியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் கனிமொழி எம்.பி.

Updated On :19 மே 2026, 1:11 am IST

தி.மு.க. துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, தூத்துக்குடி சிதம்பர நகரில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகம், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள கடைகளின் தற்போதைய நிலை, பொதுமக்களுக்கான குடிநீா், சுகாதாரம், வாகனக் காப்பகம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியன குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, அங்குள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவா், அண்ணா பேருந்து நிலைய வணிக வளாகப் பகுதிகளைப் புனரமைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

அப்போது, திமுக மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க. நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.