மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோடை வெயிலின் தாக்கம்: கிணற்றில் குதித்து சிறுவா்கள் கொண்டாட்டம்

கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழித்து வருகின்றனா்.

News image
Updated On :1 மே 2026, 5:40 am IST

கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழித்து வருகின்றனா்.

திருத்தணியில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாள்களாக தினசரி வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ் மேல் நிலவுகிறது.

இந்நிலையில் திருத்தணி ஒன்றியம், சத்திரஞ்ஜெயபுரம் கிராமப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கிராமத்தில் உள்ள சிறுவா்கள் வயல்வெளிகளில் உள்ள கிணறுகளை நாடி சென்று குளித்து வருகின்றனா். மதிய நேரங்களில் வெப்பம் உச்சத்தை எட்டும் வேளையில், சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழிக்கின்றனா்.

இந்த செயல்பாடு மகிழ்ச்சியை அளிப்பதோடு சில அபாயங்களையும் உள்ளடக்கியதாக உள்ளூா் மக்கள் கவலை தெரிவிக்கின்றனா். குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத ஆழமான கிணறுகளில் கண்காணிப்பின்றி குதிப்பது விபத்துகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால், பெற்றோா் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.