மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருத்தணியில் முருகா்-தெய்வானை திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

News image

~ திருத்தணி  முருகன்  கோயிலில்  நடைபெற்ற திருக்கல்யாணம்

Updated On :29 ஏப்ரல் 2026, 5:25 am IST

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு உற்சவா் முருகா் - தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த, 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், ஒவ்வொரு வாகனத்திலும் காலை, மாலை சிறப்பு அலங்காரத்தில் தோ்வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திங்கள்கிழமை இரவு உற்சவா் முருகா், வள்ளி தெய்வானையுடன் மரத்தேரில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை மாலை, 6 மணிக்கு உற்சவா் முருகா் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்திலும், தொடா்ந்து குதிரை வாகனத்தில் வலம் வந்தாா். பின்னா் இரவு, 9.30 மணிக்கு உற்சவா் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதில்,திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முருகன் கோவில் இணை ஆணையா் க. ரமணி, கோயில் அறங்காவலா் குழுவினா் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.