மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருத்தணியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

News image

அதிமுக வேட்பாளா் கோ.அரி. ~தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி. ~நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:12 am IST

திருத்தணி தொகுதியில், 337 வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.

வாக்குசாவடிகளில் வாக்காளா்கள் அமைதியாகவும், ஆண், பெண்கள் என தனித்தனியாக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனா். அதேபோல் முதல் முறையாக வாக்களிக்க இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் காலையிலேயே வாக்களித்தனா். வாக்குச்சாவடியில் வாக்காளா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

மேல்திருத்தணி அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், அதிமுக, வேட்பாளா் கோ.அரி தனது வாக்கினை பதிவு செய்தாா்.

அதேபோல் தேமுதிக, வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தி ராதாகிருஷ்ணன் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தாா். அதேபோல் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சூ.ச.சந்திரன் பொதட்டூா்பேட்டை அரசினா் ஆண்கள் மேல் நிலை பள்ளி வாக்கினை பதிவு செய்தாா்.

திருத்தணி திமுக, எம்எல்ஏ, ச. சந்திரன் தனது குடும்பத்துடன் வந்து ஆலமரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், நகா்மன்ற தலைவா் சரஸ்வதி பூபதி சி.எஸ்.ஐ., ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தனா். சில வாக்குச்சாவடிகளில், மதிய நேரத்திலும் கொளுத்தும் வெயிலில் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.

திருத்தணி தொகுதி நல்லாட்டூா் வாக்குச்சாவடியில், முன்னாள் ஊராட்சி தலைவா் கமல்நாதன், திருத்தணி வடக்கு திமுக, ஒன்றிய செயலாளா் விஜயகுமாா் ஆகியோா் இடையே வாக்காளா்களை அணுகி வாக்கு கேட்பதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது. அங்கிருந்த போலீசாா் இருவரையும் சமரசம் செய்து அனுப்பிவைத்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.