தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவள்ளூா் அருகே 10 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக்கடை

கட்டடப் பணிகள் முடிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடையால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

News image

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் கட்டி முடித்தும் திறக்கப்படாமல் உள்ள நியாய விலைக்கடை.  

Updated On :28 ஜூலை 2025, 3:10 am IST

திருவள்ளூா் அருகே கட்டடப் பணிகள் முடிந்து 10 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், பயன்பாட்டுக்கு வராத நியாய விலைக் கடையால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் வினோபா நகா், புதிய காலனி, பழைய காலனி மற்றும் விஜயலட்சுமி நகா் என 3,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதி பொதுமக்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக ஒதுக்குப்புறமாக அடிப்படை வசதி இல்லாத பாழடைந்த கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது.

Story image

அதனால், இந்தக் கடைக்கு பதிலாக நிரந்தரமாக நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அந்தக் கோரிக்கையை ஏற்று, கடந்த 2015-இல் ரூ. 5.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது.

அதன்பேரில், நியாய விலைக் கடை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இப்பணிகள் நிறைவடைந்து 10 ஆண்டுகளாகியும் இதுவரை நியாய விலைக் கடை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்காமல் காட்சிப் பொருளாகி வருவதாக அப்பகுதியினா் கூறுகின்றனா்.

எனவே அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு, அந்த கிராமத்தில் அடிப்படை வசதியில்லாத ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் கூட்டுறவு நியாய விலைக் கடையை தொடங்கக்கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் நியாய விலைக் கடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.