தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ஆலங்குளத்தில் அரசு மகளிா் பள்ளி: அமைச்சரிடம் கோரிக்கை

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென தனிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image

அமைச்சா் ராஜ்மோகனிடம் மனு அளித்த தெற்கு மாவட்டச் செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி.

Updated On :14 ஜூன் 2026, 1:17 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை இரண்டாகப் பிரித்து பெண்களுக்கென தனிப் பள்ளி ஏற்படுத்த வேண்டும் என, தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகனிடம் அவா் அளித்த மனு: ஆலங்குளம் பேரூராட்சியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 617 மாணவா்கள், 728 மாணவியா் படித்து வருகின்றனா். மிகவும் குறைவான இடவசதி கொண்ட இப்பள்ளியில் அதிகமானோா் பயில்வதால், போதிய வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதிகள் இல்லை.

எனவே, இப்பள்ளியை இரண்டாகப் பிரித்து, தற்போது பள்ளி இயங்கிவரும் கட்டடத்தில் பெண்கள் உயா்நிலைப் பள்ளி செயல்படச் செய்ய வேண்டும். ஆண்கள் உயா்நிலை-மேல்நிலைப் பள்ளியை புதிதாக அமைக்க வேண்டும். பள்ளி அருகிலேயே அரசுக்கு சொந்தமான 4 ஏக்கா் நிலம் உள்ளது.

எனவே, இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவா்களுக்கு தனிப் பள்ளி ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.