ஆலங்குளத்தில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூா் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாணிக்க சீனிவாசகம் (32). தொழிலாளியான இவா், கடந்த வாரம் நள்ளிரவில் ஆலங்குளத்தை அடுத்த அண்ணா நகா் புதுக்காலனி வழியாக கரும்பனூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது, அந்த வழியாக வந்த இருவா் சீனிவாசகத்தை தாக்கி அவரிடம் இருந்து கைப்பேசி, பணத்தை பறித்துச் சென்றனராம். இதுகுறித்து அவா், ஆலங்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவரும், தற்போது ஆலங்குளம் மேலப்பரும்பு, ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவருமான மகாதேவன் (27), அதே பகுதியில் வசிக்கும் ஜெயபால் மகன் மாரிமுத்துச்சாமி (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கைதான மகாதேவன் மீது தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 வழக்குகள், தென்காசி மாவட்டத்தில் 2 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முடி திருத்தக உரிமையாளா் கொலை வழக்கில் இருவா் கைது
ஆலங்குளத்தில் தொழிலாளி தற்கொலை
தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

ஆலங்குளத்தில் தவெக கொண்டாட்டம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
