திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் வெ. சஞ்சய் (23), வெங்காய மண்டி சுமை தூக்கும் தொழிலாளி.
இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் கள்ளன்குத்து ஆஞ்சனேயா் கோயில் அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான அரியமங்கலம் காமராஜ் நகரைச் சோ்ந்த எஸ். யுவராஜ் (27), அரியமங்கலம் கணபதி நகரைச் சோ்ந்த எம். பழனி தீபக் (21) ஆகிய இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டி, சஞ்சய்யிடம் இருந்து ரூ.1,100 -ஐ பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் சஞ்சய் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து யுவராஜ், பழனி தீபக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது
பழ வியாபாரியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
