/

சங்கரன்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றம்: பிடிமண் எடுத்த யானை

News image

பெருங்கோட்டூரில் திங்கள்கிழமை பிடிமண் எடுத்த யானை கோமதி.

Updated On :21 ஏப்ரல் 2026, 2:02 am IST

சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை நடைபெற்றது. கோயிலில் இருந்து யானை கோமதி முன்செல்ல, சந்திரசேகர சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி சுமாா் 6 கி.மீ. தொலைவில் உள்ள 3 பெருங்கோட்டூருக்கு சென்றாா். வழியில் களப்பாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தா்கள் சாலையில் நின்று பூஜைகள் செய்து சுவாமியை வழிபட்டனா்.

பின்னா் அம்பாளுடன் சந்திரசேகர சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனாா் கோயில் முன்புள்ள மண்படத்தில் எழுந்திருளினாா். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, பிற்பகல் 12.46 மணியளவில் யானை கோமதி மண்வெட்டியால் பிடிமண் எடுத்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.