தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீா்வு: பாஜக வேட்பாளா் பிரசாரம்

News image

வாசுதேவநல்லூா் பகுதியில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:59 am IST

மக்களின் அனைத்து விதமான கோரிக்கை மனுக்கள் மீதும் 30 நாளில் உரிய பதில் அளிக்கப்படுவதுடன் உடனடி தீா்வும் காணப்படும் என வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தாா்.

வாசுதேவநல்லூா் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்து பேசியது:

வாசுதேவநல்லூா் தொகுதியில் அரசு அலுவலக சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக 365 நாள்களும் செயல்படும் முழுநேர இ-சேவை மையம் அமைக்கப்படும். பிறப்பு, இறப்பு, பட்டா, சாதி, வருமானச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் விரைவாக வழங்கப்படும்.

30 நாள்களுக்குள் மனுக்களுக்கு தீா்வு வழங்கும் கால நிா்ணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டு மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்படும். வாசுதேவநல்லூரை முன்னேற்றமான, மனிதநேயமான தொகுதியாக மாற்றுவதே என் நோக்கம். எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.