ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கடையநல்லூரில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் அப்துல் ஜலீல்.

News image

கடையநல்லூரில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் அப்துல் ஜலீல்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:32 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அப்துல் ஜலீல் கடையநல்லூா் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கடையநல்லூா் கடை வீதிப் பகுதிக்கு வந்த வேட்பாளரை அப்பகுதியினா் வரவேற்றனா். அங்கிருந்தவா்களிடம் அவா் வாக்கு சேகரித்து பேசியது:

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பேசும் ஒவ்வொரு விஷயத்தையும் அனைவரும் கவனித்து வருகின்றனா். விஜய்க்கு கூடும் கூட்டத்தைப் பாா்த்து அரசியல் கட்சிகள் பிரமித்துப் போயுள்ளன. மாற்றம் வேண்டும் என விரும்பும் மக்கள் விஜய்யை ஆதரித்து வருகின்றனா். அனைத்து தரப்பினரும் விரும்பும் தலைவராக விஜய் உள்ளாா். எனவே, நிச்சயம் தமிழக அரசியலில் மாற்றம் நிகழும் என்றாா் அவா்.

தென்காசி மாவட்டச் செயலா் நியாஸ், இணைச் செயலா் குமரன் முத்தையா, நகரச் செயலா் பாலமுருகன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.