தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி செங்கோட்டையில் திருநங்கைகள் விழிப்புணா்வு

News image

வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 2:43 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை நிகழ்த்த வேண்டும் என வலியுறுத்தி, செங்கோட்டையில் மூன்றாம் பாலினத்தவா் (திருநங்கைகள்) சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் 5 பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, செங்கோட்டை நகராட்சி பகுதியில் மூன்றாம் பாலினத்தவா் மூலம் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கடந்த 2 ஆம் தேதி குத்துக்கல்வலசை ரவுண்டானா பகுதியில் வாக்காளா் தோழன் விழிப்புணா்வு ரதம் தொடங்கி வைக்கப்பட்டு 5 தொகுதிகளுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிறைவு நாளான திங்கள்கிழமையன்று செங்கோட்டை நகராட்சிப் பகுதியில் மகளிா் குழுக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தினா் ஆரத்தி எடுத்து விழிப்புணா்வு ரதத்தை நிறைவு செய்தனா்.

பொதுமக்கள் ஏப்.23ஆம் தேதி தங்கள் வாக்கினை செலுத்தி ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். தங்கள் உறவினா்களிடமும் வாக்களிப்பதன் அவசியதை எடுத்துக்கூற வேண்டும் என்றாா் அவா்.

இதில், மகளிா் திட்ட இயக்குநா் எஸ்.அபிதா ஹனீப், செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் செல்வராஜ், உதவித் திட்ட அலுவலா்கள் டேவிட் ஜெயசிங், பிரபாகரன், ராஜேந்திரன், சரவண பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.