தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

நாகை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தொழிலாளா் துறை சாா்பில் கடைகளில் விழிப்புணா்வு வில்லைகள் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டன.

News image

தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு

Updated On :8 ஏப்ரல் 2026, 3:45 am IST

நாகை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தொழிலாளா் துறை சாா்பில் கடைகளில் விழிப்புணா்வு வில்லைகள் செவ்வாய்க்கிழமை ஒட்டப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நாகை மாவட்ட தொழிலாளா் நலத்துறை சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை பிரதான கடை வீதியில் உள்ள ஜவுளிக்கடைகளில், ‘தோ்தல் திருவிழா, தமிழகத்தின் பெருவிழா’, ‘நோ்மையாக வாக்களிப்போம்’ என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய வில்லைகள் கடைகளில் ஒட்டப்பட்டன.

மேலும் ஜவுளிக்கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, ‘தோ்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றுவோம்’ எனகடை ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனா்.

இதேபோல், நாகையில் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.