தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

ராணிப்பேட்டை நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நூதன விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு. சந்திரகலா பங்கேற்றாா்.

News image

நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :26 மார்ச் 2026, 12:03 am IST

ராணிப்பேட்டை நவ்லாக் அரசு தோட்டக்கலை பண்ணையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நூதன விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.யு. சந்திரகலா பங்கேற்றாா்.

பேரவைத் தோ்தல் தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி மிகப்பெரிய அரசு தோட்டக் கலைப் பண்ணையான நவ்லாக் பண்ணையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நூதன விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் அரசு தோட்டக் கலைப் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் மரச் செடிகளைக் கொண்டு சட்டப் பேரவை பொதுத் தோ்தல் 2026 வாக்காளா்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட விழிப்புணா்வு வாசகத்தில் தோட்டக்கலை ஊழியா்கள் மற்றும் மகளிா் சுய உதவி குழு பெண்களுடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பங்கேற்றாா்.

பின்னா் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழிலாளா்களுடன் இணைந்து தோ்தல் விழிப்புணா்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டும்,மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழிலாளா்களுடன் இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில் வேளாண்மை இணை இயக்குநா் அசோக் குமாா், திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் செந்தில் குமரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜி, தோட்டக்கலை துணை இயக்குநா் (பொ பசுபதிராஜ், உதவி இயக்குநா் பெருமாள், உதவி மகளிா் திட்ட அலுவலா்கள் வெங்கடேசன்,ரமேஷ், வட்டாட்சியா் நடராஜன், தோட்டக்கலை அலுவலா் வேடியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.