தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

முதல்வராகப் பதவியேற்க உள்ள விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

முதல்வராகப் பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தது குறித்து...

News image

விஜய் - திருமாவளவன் - தினமணி

Updated On :1 மணி நேரம் முன்பு

முதல்வராகப் பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 108 தொகுதிகளில் வென்ற பிறகும், தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் தவெக ஆட்சி அமைக்க முடியாமல் பிற கட்சிகளின் ஆதரவை நாடியது. இதையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவளித்தன.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெகவின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை முதல்வராக நியமித்து அதற்கான உத்தரவை சனிக்கிழமை (மே 9) வழங்கினார். இதனையடுத்து, இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார்.

இதற்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதல்வராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

VCK leader Thirumavalavan has extended his wishes to TVK leader Vijay, who is set to assume office as Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.