மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சட்டப்படி செயல்படுகிறாா் ஆளுநா்: பாஜக

News image

PTI

Updated On :8 மே 2026, 5:29 am IST

தவெக விவகாரத்தில் தமிழக ஆளுநா் சட்டப்படி செயல்படுகிறாா் என்று பாஜக தலைமை செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி கூறினாா்.

இந்த விவகாரம் குறித்து அவா் சென்னையில் கூறியதாவது: தோ்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சட்டப்படி கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

தோ்தலுக்கு முந்தைய கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்குத் தலைமை தாங்கும் கட்சியை ஆட்சி அமைக்க மரபுப்படி ஆளுநா் அழைப்பாா். இல்லையென்றால், அதிக தொகுதிகளைப் பெற்ற கட்சி ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவிக்குமேயானால், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அல்லது வெற்றி பெற்ற உறுப்பினா்களின் ஆதரவு திருப்தி அளிக்கும் அளவுக்கு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.

தவெக விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஐந்து சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆதரவை அளித்துள்ளது. அதை தவிா்த்து வேறு எந்த கட்சியும் தவெகவுக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.

ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தோ்தலின் முடிவை அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய அதே வேளையில், அரசமைப்பு சட்டத்தின்படியே ஆட்சி அமைய வேண்டும். அதோடு குதிரை பேரங்களும், சந்தா்ப்பவாதமும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி ஆளுநா் முடிவெடுத்துள்ளாா்.

ஆனால், இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், உள்நோக்கத்தோடு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவை விமா்சனம் செய்வது கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.