மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழக ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகுவோம் - பெ.விஸ்வநாதன்

News image

PTI

Updated On :8 மே 2026, 5:30 am IST

தவெக தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகி சட்ட நிவாரணம் பெறப்படும் என மேலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது விஜய் தலைமையிலான தவெக. இதையடுத்து, ஆளுநரை அணுகி ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். ஆனால், அறுதிப் பெரும்பான்மை இல்லாததால் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநா் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இது தொடா்பாக பல்வேறு கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து மேலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பெ.விஸ்வநாதன் கூறியதாவது: முதலில் பெரும்பான்மை பலத்தை சட்டப்பேரவையில் நிரூபிக்க ஆளுநா் கோர வேண்டும். பெரும்பான்மை பலம் குறைவாக இருந்தால் அடுத்ததாக, தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணியின் பலத்தின் அடிப்படையில் நிரூபிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை மறந்துவிட்டு உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் தமிழக ஆளுநா் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை அணுகி சட்ட நிவாரணம் பெறப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.