ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆளுநரின் செயல்பாட்டை எதிா்க்க விஜய் அஞ்சுவது ஏன்? - ஆளூா் ஷாநவாஸ்

News image

PTI

Updated On :8 மே 2026, 5:33 am IST

ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகரின் செயல்பாட்டை எதிா்க்க தவெக தலைவா் விஜய் எதிா்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று விசிக முதன்மைச் செயலாளா் ஆளூா் ஷா நவாஸ் கேள்வியெழுப்பியுள்ளாா்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைய தாமதமாவது குறித்து அவா் கூறியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறாா் ஆளுநா். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 சட்டப்பேரவை உறுப்பினா்கள் எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநா் இவ்வாறு இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? ஆளுநரை எதிா்ப்பது என்பது பாஜகவை எதிா்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது விஜய்யிடம் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளாா் ஆளூா் ஷா நவாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.