தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) நடைபெறவுள்ளது.
மாநிலத்தின் 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், 62 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 வாக்கு எண்ணும் அறைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியும், தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கும்.
வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்களும், செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொகுதிக்கு ஒருவர் என 234 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனையொட்டி, தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 18,000 போலீஸார் ஈடுபடுவது மட்டுமின்றி, 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது, மாநிலத்தில் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்கும்வகையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மாநகர் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்பட 234 தேர்தல் பார்வையாளர்களுடனும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் போட்டியிடுகின்றனர்.
Summary
TN Polls 2026: All arrangements for the vote count are ready
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயாா்

வாக்கு எண்ணிக்கை: அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

மே 4-ல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை! எப்போது தொடங்கும்? - தேர்தல் ஆணையம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


