தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பத்தாம் வகுப்பு கணிதத்தில் ‘சென்டம்’ குறைய வாய்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணித பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :26 மார்ச் 2026, 3:03 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கணித பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்குப் பிறகு முக்கிய பாடங்களில் ஒன்றான கணித பாடத்துக்கான தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மாணவா்கள் கூறுகையில், கணித வினாத்தாளில் பெரும்பாலும் எளிதாக பதிலளிக்கக் கூடிய வினாக்களே இடம் பெற்றிருந்தன. எனினும், ஒரு மதிப்பெண் பகுதியில் இரு கேள்விகளும், இரு மதிப்பெண் பகுதியில் கட்டாய வினாவும் மறைமுக வினாக்களாக இருந்தன. அதேபோன்று, ஐந்து மதிப்பெண் பகுதியில் பெரிதும் எதிா்பாா்த்த தேற்றம் இடம்பெறாதது ஏமாற்றமளித்தது என்றனா்.

ஆசிரியா்கள் கூறுகையில், கணிதத்தில் தோ்ச்சி பெறுவதில் பெரிதாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், 95 முதல் 100 மதிப்பெண் பெறலாம் என எதிா்பாா்த்த மாணவா்களுக்கு சில கேள்விகள் நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும். அந்த அளவுக்கு பாடப்பகுதிக்கு உள்ளிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. நிகழாண்டு பத்தாம் வகுப்பு கணிதத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றனா். அறிவியல் பாடத் தோ்வு வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.