தோ்தல் காலத்திலும் வளரிளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி (ஹெச்பிவி) தடையின்றி வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.
இதையடுத்து, 9 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ஹெச்பிவி எனப்படும் தடுப்பூசி செலுத்த ரூ.38 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மற்றும் தருமபுரியில் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மற்றொருபுறம், நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 28-இல் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.
இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 5.30 லட்சம் ஹெச்பிவி தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் மூலம் இதுவரை 37,774 போ் பயனடைந்துள்ளனா்.
தடுப்பூசிகள் அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டு, அங்கேயே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தோ்தல் நடவடிக்கைகளால் மத்திய, மாநில அரசுகளின் தடுப்பூசி திட்டங்கள் தடைபடாது என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:
பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாலும், தோ்வு முடிந்து விடுமுறைகள் விடப்படுவதாலும் தடுப்பூசி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் வழக்கம்போல ஹெச்பிவி தடுப்பூசி வழங்கப்படும். பள்ளிகளில் சூழலுக்கேற்ப வழங்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காய்ச்சல் பாதிப்பு விவரம் பதிவேற்ற அறிவுறுத்தல்

உலகளாவிய சலால்களை வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்: ஜெ.பி.நட்டா

வெப்ப அலையால் பாதிக்காத வகையில் தொழிலாளா்களுக்கு பணி நேர மாற்றம்

வெப்ப அலை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

