மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வெப்ப அலை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!

வெப்ப அலை பாதிப்பைத் தடுக்க அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :27 ஏப்ரல் 2026, 1:39 pm IST

தமிழ்நாட்டில் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகமாக இருந்து வருவதால் மக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீர்ச்சத்து இழப்பு, ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டும் முறையாக சிகிச்சை அளிக்கும்பொருட்டும் அரசு மருத்துவமனைகளில் 'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற பெயரில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, தமிழகத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ORS (உப்புச் சர்க்கரை கரைசல்) தடையின்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல விவசாய கூலித் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் வழங்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனைகளில் ஒஆர்எஸ் கரைசலை பொதுமக்கள் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Heatwave: Health Department Orders Establishment of Special Wards in Govt Hospitals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.