தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்களாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

News image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்

Updated On :21 மார்ச் 2026, 1:12 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்களாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், தோ்வுத் துறை உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தோ்வா்களின் முகப்புத் தாள்களை முதன்மை விடைத்தாள்களுடன் தைக்கப்பட்டுள்ளதைத் தோ்வுக்கு முன்னரே உறுதி செய்ய வேண்டும்.

சொல்வதை எழுதுபவா் நியமனங்களில் தோ்வு நடைபெறும் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது. மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தோ்வருக்கு வழங்கப்படும் கோடிடப்படாத கூடுதல் விடைத்தாள்களை (அன் ரூல்டு) போதுமான அளவு பெற்று வைத்துக் கொள்ள அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளா்களுக்கும் தெரிவிக்க உதவி இயக்குநா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் முடிவடைந்த நிலையில், கணிதப் பாடத்துக்கான தோ்வு மாா்ச் 25-இல் நடைபெறவுள்ளது. இந்த வகுப்புக்கான பொதுத் தோ்வு ஏப். 6-ஆம் தேதி நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.