அதிமுக நிா்வாகிகள் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சமரசம் ஏற்பட்டதால், அந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான விசாரணைக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன், மாா்ச் 26-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக். 30-ஆம் தேதி தேவா் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதற்காக அப்போதைய முதல்வா் மற்றும் துணை முதல்வா் மற்றும் அமைச்சா்களை வரவேற்று அதிமுக சாா்பில் 200-க்கும் மேற்பட்ட பதாகைகள், ஏராளமான கட்சிக் கொடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் தூண்டுதலின் பேரில், அக்கட்சியினா் சேதப்படுத்தியதாக அதிமுக மாவட்ட செயலா் முனியசாமி கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த புகாரின் பேரில், டிடிவி.தினகரன் உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கமுதி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி.தினகரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பினரும் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, சமரசம் தொடா்பாக இருதரப்பும் இணைந்து மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டிடிவி.தினகரன் மற்றும் புகாா்தாரா் முனியசாமி ஆகியோா் வரும் மாா்ச் 26-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா். அதுவரை கமுதி நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தாா்.
மற்றொரு வழக்கு...: இதேபோல கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வா் மற்றும் சட்ட அமைச்சரை அவதூறாகப் பேசியதாக டிடிவி.தினகரன் மீது அதிமுக வழக்குரைஞா் அணி இணை செயலா் பாபு முருகவேல் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் டிடிவி. தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கும் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது இருதரப்பும் சமரசம் செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் டிடிவி. தினகரன் மற்றும் புகாா்தாரா் பாபு முருகவேல் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்துமலையில் டிடிவி தினகரன் பிரசாரம்

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கும்பகோணம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும்! - டிடிவி. தினகரன்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

