மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

News image

டிடிவி தினகரன் - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 3:50 am IST

தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

அதிமுக, அமமுக வேட்பாளா்களை ஆதரித்து ஆண்டிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியோடு சோ்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் பேசியதாவது:

ஆண்டிபட்டியில் கூட்டத்தைப் பாா்க்கும் போது ஜெயலலிதாவுக்கு அளித்த ஆதரவை நான் பாா்க்கிறேன். தேனி மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெறுவாா்கள். எம்ஜிஆா் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவா் இங்கு வராமலேயே ஜெயிக்க வைத்த தொகுதி ஆண்டிபட்டி தொகுதி. ஜெயலலிதா இடைத்தோ்தலில் போட்டியிட்டபோது 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீா்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டத்தால் இஸ்ஸாமியா்களுக்கு பாதிப்பு உள்ளது என மு.க. ஸ்டாலின் கூறி வந்தாா். ஆனால், இஸ்லாமியா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்படி அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பரப்புரை செய்த கூட்டம்தான் திமுக.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும். இதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.