தேர்தலின்போது போக்குவரத்துத் துறையில் சில அதிகாரிகளைக் கொண்டு பேருந்து வசதிகளை திமுக அரசு நிறுத்தியதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் நிர்மல் குமார் பேசியதாவது, "பேருந்து வசதி வேண்டுமென்றே தடை செய்யப்பட்டது. இந்தத் தேர்தலை நடத்திய ஒரு சில அதிகாரிகள்தான். செந்தில்வேல், டேவிட்சன் ஆசிர்வாதம், உமாநாத் ஐஏஎஸ் போன்ற ஒரு சில அதிகாரிகள் சேர்ந்துதான் மொத்த தேர்தலையும் நடத்தினர்.
திமுக சார்பாக ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் இருவருக்கும் பின்னணியாகச் செயல்பட்ட இதுபோன்ற அதிகாரிகள்தான், போக்குவரத்துத் துறையிலிருந்த முக்கிய அதிகாரிகளைக் கொண்டு பெரும்பாலான இடங்களில் பேருந்துகளை நிறுத்தியுள்ளனர். முக்கிய பேருந்துகளெல்லாம் திருப்பி விடப்பட்டுள்ளது. பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. எல்லா பேருந்துகளையும் அந்தந்த பணிமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன.
குறைந்தபட்சம் 20 லட்சம் பேராவது வாக்களிக்க விடாமல், அவர்கள் அனைவரையும் ரோட்டில் ஒருநாள் முழுவதும் 15 மணிநேரமாக பெண்களும் குழந்தைகளும் உணவின்றி, நீரின்றி அவதியுற்றனர். இது ஒரு மோசமான செயல்.
இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில், போதுமான பேருந்து வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்பே தேர்தல் ஆணையம் சொல்லியிருந்தது. அதெல்லாம் தெரிந்தே, வேண்டுமென்றே தேர்தலின்போது காலதாமதம் செய்து, யாரையும் வரவிடாமல் செய்து, போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்யாமல், வந்த பேருந்துகளையும் திருப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து ஏற்கெனவே நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.
இதில் பின்னிருந்து இயக்கும் அதிகாரிகளான டேவிட்சன், செந்தில்வேல், உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகள், திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் போன்று, திமுகவின் அனைத்து தவறுகளுக்கும் துணைநின்று, உடந்தையாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக, ஒரு பெரிய மாற்றம் வரும். 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய ஒரு கும்பலிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
Summary
TN Polls 2026: The liberation people have been expecting will be achieved on May 4th, says TVK Leader Nirmal Kumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK
தேர்தல் பிரசாரத்தில் பாட்டில் வீச்சு! தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்க தவெக கோரிக்கை
தவெகவால் தொகுதிகள் மாறும் அமைச்சர்கள்: நிர்மல் குமார்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
