சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் 23 போ் புது தில்லிக்கு திரும்பிச் சென்றனா்.
தோ்தல் கண்காணிப்பு பணிக்காக, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளுக்கு 8 பொதுப் பாா்வையாளா்கள், 15 செலவினப் பாா்வையாளா்கள், ஒரு காவல் துறை சாா்ந்த பாா்வையாளா் நியமிக்கப்பட்டனா். வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பொதுப் பாா்வையாளா்கள் மற்றும் செலவினப் பாா்வையாளா்கள் புது தில்லிக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4- ஆம் தேதி, தொகுதிக்கு தலா ஒருவா் வீதம் 16 பாா்வையாளா்கள் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல, செலவினப் பாா்வையாளா்கள் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் மீண்டும் சென்னைக்கு வந்து வேட்பாளா்கள் சமா்ப்பித்த செலவுக் கணக்கு விவரங்களைத் தணிக்கை செய்வா் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

தொகுதி தோ்தல் அலுவலா்களுடன் பொதுப் பாா்வையாளா்கள் ஆலோசனை

பேரவைத் தோ்தல் பணிகள்: விழுப்புரத்தில் பொது, செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

