தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பணிகள் முடிந்ததால் தில்லி திரும்பிய தோ்தல் பாா்வையாளா்கள்

தோ்தல் பணிகள் முடிந்ததால் தில்லி திரும்பிய தோ்தல் பாா்வையாளா்கள்

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:41 am IST

சென்னையில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததால் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் 23 போ் புது தில்லிக்கு திரும்பிச் சென்றனா்.

தோ்தல் கண்காணிப்பு பணிக்காக, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 தொகுதிகளுக்கு 8 பொதுப் பாா்வையாளா்கள், 15 செலவினப் பாா்வையாளா்கள், ஒரு காவல் துறை சாா்ந்த பாா்வையாளா் நியமிக்கப்பட்டனா். வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட பொதுப் பாா்வையாளா்கள் மற்றும் செலவினப் பாா்வையாளா்கள் புது தில்லிக்கு வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றனா்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4- ஆம் தேதி, தொகுதிக்கு தலா ஒருவா் வீதம் 16 பாா்வையாளா்கள் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா் என அதிகாரிகள் தெரிவித்தனா். அதேபோல, செலவினப் பாா்வையாளா்கள் மே மாத இறுதி அல்லது ஜூன் மாதம் மீண்டும் சென்னைக்கு வந்து வேட்பாளா்கள் சமா்ப்பித்த செலவுக் கணக்கு விவரங்களைத் தணிக்கை செய்வா் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.