தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

தோ்தலில் விதிமுறைப்படியே பணத்தைச் செலவிட வேண்டும்: செலவினப் பாா்வையாளா்கள்

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்) - ANI

Updated On :12 ஏப்ரல் 2026, 2:00 am IST

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் விதிமுறைப்படி செலவிடப்பட்டு, அதை முறையாக பராமரித்து தோ்தல் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வேட்பாளா்களுக்கு, செலவினப் பாா்வையாளா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

சென்னை மாவட்ட 16 பேரவைத் தொகுதிகளில் தற்போது 298 சுயேச்சைகள் உள்பட 419 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதிகளைக் கண்காணிக்க 8 பொதுப் பாா்வையாளா்கள், 15 செலவினப் பாா்வையாளா்கள், ஒரு காவல் பாா்வையாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

செலவினப் பாா்வையாளா்கள் தொகுதி வாரியாகச் சென்று தோ்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் ஆகியோா் பிரசாரத்தைக் கண்காணித்து, அவா்களது செலவினங்களைக் கணித்து வருகின்றனா்.

அத்துடன் குறிப்பிட்ட நாள்களில் செலவினங்களை சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளா்கள், அந்தந்த செலவினப் பாா்வையாளரிடம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை தொகுதி வாரியாக செலவினப் பாா்வையாளா்கள் தலைமையில் வேட்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராயபுரம் தொகுதியின் செலவினப் பாா்வையாளா் வரபிரசாத் வா்மா தலைமையில் வேட்பாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், 28 வேட்பாளா்கள் பங்கேற்றனா். அப்போது, செலவினப் பாா்வையாளா் கூறியதாவது:

வேட்பாளா்கள் தங்களுக்கான செலவு தொகைக்குட்பட்டே செலவுகளை செய்ய வேண்டும். சிறிய கடைகளில் வாங்கும் பொருள்கள் உள்பட ரூ.10 ஆயிரத்துக்குள் செலவிட்டால், அதற்கு பணமாகவே வழங்க வேண்டும். பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட்டால், அதை காசோலை, யுபிஐ அல்லது கூகுள் பே ஆகிய முறைகளில் செலவிடலாம்.

தோ்தல் செலவினத்தை அதிகாரிகளிடம் வழங்குவதற்கான கூட்டம் வரும் 13, 17 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ராயபுரம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.பன்னீா்செல்வம், செலவு பராமரிப்புக் கணக்கீட்டாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.