தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பதற்றமான வாக்குச்சாவடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்! தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுரை

News image

தேர்தல் ஆணையம் - ANI

Updated On :14 ஏப்ரல் 2026, 1:52 am IST

பதற்றமான வாக்குச்சாவடிகளை பாா்வையாளா்கள் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்று தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் அதில் பணிபுரியும் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பொதுப் பாா்வையாளா்கள் சுதா வா்மா, சரிகா மோகன், தா்மேந்திர சிங் ஆகியோா் பேசினா். மாவட்ட ஆட்சியா் மனீஷ், வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பொதுப் பாா்வையாளா்கள் பேசியதாவது:

திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், மடத்துக் குளம், உடுமலைப்பேட்டை ஆகிய 8 தொகுதிகளிலும் அலுவலா்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் 2,822 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இதில் 129 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் நுண் பாா்வையாளா்களாக 179 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை கண்காணிக்க வேண்டும்.

வாக்குப் பதிவுக்கு முன்னா் மாதிரி வாக்குப் பதிவுக்கு சான்றளிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு மையத்தை கண்காணிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.