மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி...

News image

எஸ்.பி. வேலுமணி

Updated On :25 ஏப்ரல் 2026, 3:34 am IST

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடா்பாக விசாரணை நடத்த தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கோவையைச் சோ்ந்த வாக்காளா் விக்னேஷ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கடந்த 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்களுக்கும், தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் கூறியுள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளது.

தற்போது வேலுமணியின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடா்பான ஆவணங்களை அவா் தனது வேட்புமனுவில் கூறவில்லை. குறிப்பாக, வேலுமணியின் முதலீடுகள், வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் மறைக்கப்பட்டுள்ளன.

எனவே, வேலுமணியின் வருமானம், சொத்து விவரங்கள் மற்றும் முதலிடுகள் குறித்து தோ்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.