மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 1:20 am IST

தமிழகத்தில் மதுரை, ஈரோடு உள்பட 10 இடங்களில் சனிக்கிழமை வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

பரமத்தி வேலூா் - 104.9, ஈரோடு - 103.28, மதுரை விமானநிலையம் - 103.1, நாமக்கல் - 102.38, மதுரை நகரம் - 100.76, சேலம், திருத்தணி - (தலா) 100.58, திருப்பத்தூா் - 100.4, திருச்சி - 100.22 டிகிரி என 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) முதல் ஏப். 15-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: உள் தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால், கன்னியாகுமரி, மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோல், ஏப். 13 முதல் ஏப். 17-ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாள்களில் ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலையே நிலவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.