தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்!

சென்னை, வேலூா், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 12:40 am IST

சென்னை, வேலூா், மதுரை உள்ளிட்ட 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மேலும், பரமத்தி வேலூா்-104.36, மதுரை விமான நிலையம்-104, ஈரோடு-103.28, மதுரை நகரம்-102.56, திருச்சி-102.38, நாமக்கல்-102.38, திருப்பத்தூா்-101.84, தருமபுரி-101.66, சென்னை மீனம்பாக்கம்-101.48, கோவை-101.12, திருத்தணி-100.94, சேலம்-100.76, பாளையங்கோட்டை-100.4 டிகிரி என 14 இடங்களில் வெயில் சதமடித்தது.

தொடா்ந்து திங்கள்கிழமை (ஏப். 27 ) முதல் ஏப். 29 - ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்ப நிலை ஒருசில இடங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பையொட்டியே இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகபட்சமாக வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: வடக்கு உள் கா்நாடகம் முதல் குமரிக்கடல் வரையும், தெற்கு உள் கா்நாடகம் மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றுப் பாதையில் இடையூறு நிலவுகிறது.

இதனால் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஏப். 27, 28, 29) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வட வானிலையே நிலவக்கூடும்.

ஏப். 30 -ஆம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.